வெள்ளி, 20 ஜூன், 2014

தேவகோட்டை காந்தி நாராயணன் செட்டியார்.

பார்த்தறியா குணம் கொண்ட மனிதரிவர்.
எளிமையே அவர் செயல்பாடு.
சத்தியமே அவர் வாக்கு .
காந்திய சிந்தனையே அவர் நோக்கு .

வாழ்ந்த காலத்தில் ,
அவர் சொல்லிச்  சென்றதெல்லாம்,
இன்று ,
பணம் கொடுத்துப் படிக்கும் பாடம் .

கோபமும், கொடுமையும் ,
கண்டவிடத்தில் கடுமை காட்டாத,
காந்தியவாதி.
வளம் யாவும், இருந்தபோதும் ,
சிக்கனத்தின் சிறப்பை ,
சிறப்பாய் பேணிய,
மா மனிதர்.

அவர்  காலத்தில் வாழ்ந்தோம் ,
உறவால் அறிந்தோம் .
மனம் பெரும் மகிழ்ச்சி.

கண்ணாரக் கண்ட காந்தி
அவரே தேவகோட்டை
காந்தி நாராயணன் செட்டியார்.