சனி, 23 ஆகஸ்ட், 2014

கேள்விகள்


எடுப்பதும் தொடுப்பதும்
வினையென்றால்
நினைப்பதை என்னவென்பது

பார்ப்பதும் நடப்பதும்
செயலென்றால்
மகிழ்வதை என்னவென்பது

படைப்பதும் காப்பதும்
மரபென்றால்
மரணத்தை என்னவென்பது

கொடுப்பதும் பெறுவதும்
தர்மமென்றால்
நேயத்தை என்னவென்பது

தொழுவதும் எழுவதும்
பக்தி யென்றால்
பணிவை என்னவென்பது

பொறுமையும் ,நயமான பேச்சும்,
அன்பென்றால்,
அரவணைப்பை என்னவென்பது ?






நல்லவை நடக்கும்


வேறான செய்திகள் மாறாக வந்து சேர,
வெந்து போகுது மனம்.
தவறான செய்கைகள் தடம் புரண்டு ஓட,
மனம் தத்தளிக்குது தினம்.

கூட இருந்தே, கெடுதல் செய்வார் செயல்,
கசந்து போகுது மனம்.
பணத்தாசையின் உச்சம் பரிதவிக்குது,
மாற்ற முடியாத  குணம்.

உண்மைக்கு மாறாக  நடப்பார்,
நன்மையே அறியாத பலர்.
வெளி வேஷம், பகட்டு ,
பொய், பித்தலாட்டம்,
கூடி நின்னு ஒன்னா நிக்குது.

ஒதுங்கி நின்னு பார்க்கும் கூட்டம்,
கை கட்டி சும்மா பார்க்குது .
தினம் நடுக்குது நாட்டிலே ,
மாற்ற நினைக்க யார் உளர்.

உண்மைக்கு கை கொடு,
உயர்வுக்கு தோள்கொடு,
தவறு கண்ட இடத்தில் தட்டி கேட்டிடு,
 எட்டி நின்று பார்க்கும் கூட்டம்,
உன்னதம் அறிந்து உன்னை உயர்த்தும். 

உன்னளவில் நீ உயர்ந்தால்,
நல்லவை  நடக்கும் நாளைய உலகில்.