செவ்வாய், 4 மார்ச், 2014

திரு கரு.வள்ளியப்ப செட்டியார் முத்து விழா வாழ்த்து.


பெரும் குணத்துச் செம்மல் ,
பிறையாயிரம் கண்ட அண்ணல் .
சிந்தனையும் சிரிப்பும் ,
தினம் கண்ட நல்ல உள்ளம் .

எம் தந்தையிடம் காட்டிய  அன்பு ,
தவறாமல் பிள்ளைகளிடமும் ,
காட்டியது  பெரும்  பேறு.
அதுவே உங்கள் சிறப்பு.

அழகு தமிழ் கவிதை ,
ஆனந்தமாய் படைக்கும் ,
ஆற்றல்,வித்தகம்  புரியும்
வித்தகர் .

குணப் பொருத்தம் ,
பெயர் பொருத்தம் ,
உடையவர் என்றே ,
ஊர் சொல்லும், உடையம்மை ஆச்சி .

அருமை மிகு பிள்ளைகள்,
பெருமை சேர்க்கும் செல்வங்கள்.
பொறுமை  காத்து,
நேர்மை கண்டவர்கள் .

ஆயா,அப்பத்தா ,ஐயா என்று
பேரன் பேத்திகள் கூடியிருந்து,
குதுகலிக்கும் நேரமிது,
குடும்பத்துச் சிறப்பு இது .

அலுவல் காரணமாய் ,
இங்கு இல்லா காரணத்தால் ,
வந்திருந்து வாழ்த்தினைப்,  
பெற இயலவில்லை .

நேரில் நிகழ்ச்சிக்கு ,
வராத போதும், 
நினைவில் நின்றது , 
நினைந்தது மனது ,
மலர்ந்தது மகிழ்ச்சி .

வரும் காலங்கள் ,
வளம் சேர்க்கட்டும் ,
நலம் கூடட்டும், 
நன்மை பெருகட்டும்.

அருமை பெருமையோடும் ,
ஆச்சியோடும் , அமர்ந்திருந்து ,
அகம்  மகிழ்ந்து, ஆசி நல்க, 
மனம் குளிர்ந்து கேட்கிறேன் .

வாழ்த்துங்கள் !
வளம்பெற ,
வாழ்த்துங்கள் !