வெள்ளி, 6 மார்ச், 2015

நகரத்தார் .

நலம் செய்து ,வளம் கண்டவர்கள்  நகரத்தார் .
கொடை செய்து,  குலம் காத்தவர்கள்  நகரத்தார் .
கோடி இருந்தும், குணம் மாறாதார் நகரத்தார் .
குலப் பெருமை காப்பதில், முதன்மை நகரத்தார் .
வழி கேட்டு வந்தோருக்கும் விருந்து வைப்பார் நகரத்தார்

செய்த தர்மங்கள், எடுத்துச் சொன்னதில்லை.
செய்வித்த திருப்பணிகள் , எழுதிப் பார்த்ததில்லை.
கோயில்களுக்கு
கொட்டிக் கொடுத்த நகைகள்,வாகனங்கள்   ,
கொடுத்தவர் யார் என்று தெரிவதில்லை.
எழுதி வைத்த நிலங்கள், எண்ணில் அடங்குவதில்லை .

தனம் தேடக் கடல் கடந்தவர்கள்.
தேடிய செல்வமெல்லாம் தானத்திற்கே கொடுத்தவர்கள்.
முப்போதும் சிவன்  பாதம் மனதில் நிறுத்தியவர்கள்.

கோட்டையென  வீடும்  கட்டி,
அண்ணாந்து பார்க்கும் கோபுரங்களும் கட்டி,
அன்ன சத்திரங்கள் ஆயிரமும் கட்டி,
எழுத்தறிவுக்கு கல்விச் சாலைகளும்,
உயுர் காக்கும் மருத்துவ மனைகளும்,
கட்டிக் கொடுத்தவர்கள் ,காத்தவர்கள் நகரத்தார்கள்.

மா .அரு .சோமசுந்தரம் . தேவகோட்டை .