புதன், 13 ஆகஸ்ட், 2014

தேசப் பிதாவே.

தேசப் பிதாவே,
நீ கால் பதிக்காத நாடு
அமெரிக்கா!
அயல் தேசம் என்றளவில்,
 உன் தபால் தலையை முதன்மையாய் ,
வெளியிட்டது அந்நாடே !

தேசப் பிதாவே ,
இருக்கும் காலத்தில்,
உனக்கு என்று பணம் ஏதும் சேர்க்கவில்லை ,
வங்கிக் கணக்கும் உன் பெயரிலில்லை ,
ஆனால் இன்று  ,
இந்திய தேசத்தின் பணத்தாளிளெல்லாம் ,
உன் படமே !

தேசப் பிதாவே !
இந்தியத் திரு நாட்டின்
விடுதலைக்கு வித்திட்டவன் ,
ஆயுதமேந்தாமல் ,அறப்போராட்டம்
நடத்தி அமைதி கண்டவன்
நாட்டிற்கு விடுதலை பெற்றுத் தந்தவன். 

நோபெல் பரிசு ,
உலகின் தலையாயப் பரிசென்பார்.
உனக்கு நோபெல் குழு ,
அமைதிக்கான நோபெல் பரிசு
இருக்கும் போதும் வழங்கவில்லை
இறந்தபின்னும் வழங்கவில்லை.
உன் கள்ளமில்லா பொக்கை வாய்
சிரிப்பிற்கு ஈடாகுமா எந்தப் பரிசும்.

உன் ஆயுதமேந்தா அறவழியில்
உன் வழியே  எங்கள் வழியென்று
உன்னைப் பின் பற்றிய ஐய்வர்
பெற்றார் அமைதிக்கான நோபெல் பரிசினை!
காந்திய வழியை பின்பற்றியதால் பெற்றோம்
பரிசு என்பது அவர்தம்  கூற்று.

(அந்த ஐவர்
1.மார்டின் லூதர் கிங்     -அமெரிக்கா .
2.தலாய் லாமா                - திபெத்.
3.ஆங் சான் சூகி              - மியான்மர்.
4.நெல்சன் மண்டேலா - தென் ஆப்ரிக்கா. (jointly with Frederik William of  SA )
5.அடால்ப்போ பெரோஸ் எ ஸ்க் யூ வெல் - அர்ஜென்டினா .)