சனி, 9 ஜனவரி, 2021

அனுப்புனர்:                         11.01.2021

அரு.சோமசுந்தரம்,

24,தபால் தந்தி நகர் சாலை,

விசாலாட்சிபுரம். 

மதுரை - 625014. 

பெறுநர். 

சார் பதிவாளர், 

அலங்காநல்லூர், 

குறிப்பு: 2001 வருட சந்தை மதிப்பு வேண்டியதற்கான கடிதம். 

விவரம்: மதுரை வடக்கு தாலுக்கா 79 நிர் கடவூர் கிராமம் ரீ சர்வே எண். 75/1.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ரீ சர்வே எண்ணுக்கு உட்பட்ட என்னுடைய இடத்தினை 14.10.2019ல் 5107,5108,5109,மற்றும்5110 என்று நான்கு பத்திரங்களாக நான்கு நபர்களுக்கு விற்றுள்ளனர். 

நீண்ட கால மூலதன ஆதாய வரி. (Capital gain tax) வருமான வரி ஆய்வுக்கு சமர்ப்பிப்பதன் பொருட்டு, மேலே குறிப்பிடப்பட்டுள்ள ரீ சர்வே இடத்திற்கு 2001ஆண்டிற்கான சந்தை மதிப்பு ( Guide line value) வேண்டியுள்ளது. 

இணாய தளத்தில் தேடுதல் செய்த போது 2017 ஆண்டிற்கு முந்தைய வருடங்களுக்கு விவரங்கள் இல்லை. 

ஆகவே, மேற்படி இடத்தின் 2001 ஆண்டின் சந்தை மதிப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 

அன்புடன். 

...................................... 

அரு. சோமசுந்தரம். 



திங்கள், 12 அக்டோபர், 2015

கடவுள்



கடவுள் என்று தனியொருவருமில்லை ,
உணரும் காலம் வருவதுமில்லை ,
வாய்ப்பு வந்தபோதும் நினைப்பதுமில்லை,

உண்மையாய் இருப்பதும் ,
உதவிடும் எண்ணமும் ,
அன்பெனும் ஆதரவும் ,
உயர்வின் உயரல்லவா !
கடவுளை
உணரும் உணரல்லவா !

வியாழன், 1 அக்டோபர், 2015

என் அழகே !


கன்னக் குழியில் நகை காட்டு
காது மடலில் நிறம் காட்டு
அன்னம் போல் நடை காட்டு
வண்ண நிலவில் முகம் காட்டு

மன்னன் மார்பில் மல்லிகை சூட்டு
மயக்கம் தள்ள பஞ்சனை நீட்டு
தயக்கம் தள்ளி சுகம் கூட்டு
பக்கம் வந்து இதம் காட்டு

ஒப்பனைகள் உனக்கெதற்கு
ஒளிந்திருக்கும் அழகெல்லாம்
மறைப்பது சரியாகுமா
மலரெல்லாம் உனக்கு ஈடாகுமா

தேன் தரும் சுவை
மான் மருளும் பார்வை
வான் விரிக்கும் உல்லாசம்
அத்தனையும் நீயே !நீயே !





வியாழன், 24 செப்டம்பர், 2015

சுந்தரேசன் சம்பந்தம் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து 24.09.2015



பிறப்பின் மேலாம் நிலை,
பிரிதோர் சொல் கேளாமை.
உறவின் உன்னதம்,
உடனிருந்து நலம் செய்தலே.
கற்றவை கடனென்றே,
பலருக்கும் கொடுத்திடல் வேண்டும்.
செய்வன திருந்தச் செய்தல்,
உயர்வுக்கு ஒரு வழியாம்.

மேற் சொன்னவையாவும்,
உங்கள் தனிச் சிறப்பு.
வாழ்த்துக்கள்.
பிறந்த நாள் நினைவில்
நின்று மகிழ்ச்சி தரும் நாள்.
மகிழ்வோடு, நலம்யாவும் பெற்று
சிறக்க வாழ்த்துக்கள்.

வள்ளல் அழகப்பர்

கொடைக்கோர் கர்ணன்,
கண்ணார கண்டோமில்லை.
கொண்டதல்லாம் கொடுத்த வள்ளல்
அழகப்பர்.
கண்ணார கண்டோம்.

கல்வியே காலமெல்லாம் காக்குமென்று,
கல்விச் சாலைகள் பல ,
காரை நகர் கண்ட வள்ளல்.

எழுதிப் பார்க்க முடியாத தர்மங்கள்,
எண்ணிப் பார்க்க முடியாத கொடைகள்.

மண் பரப்பும் ,விண் விரிப்பும்,
உள்ளளவு உயர்ந்த புகழ் நிலைக்கக் கண்டோம்.

செவ்வாய், 15 செப்டம்பர், 2015

கோபமும் ,கவலையும் ஒன்றே !

கோபமும் ,கவலையும் ஒன்றே !
உணர்ச்சியின் வெளிப்பாடு கோபம் .
உள்ளிருக்கும் நிலைப்பாடு கவலை .

உச்சத்தில் கத்துவதும் ,
கடுகடுவென  இருப்பதும் ,
தன்னிலை மாறுவதும் ,
மனித நேயம் மறப்பதும்,
வேகம் சேர்ப்பது கோபம் .

உணர்ச்சிதனை அடக்கி,
உண்மைதனை மறந்து ,
உள்ளத்துள் புழுங்கி ,
சோகம் சேர்ப்பது கவலை.

விஷயமில்லாமல் ,
விஷம் தோய்ந்து ,
பகை சேர்க்கும் ,
பலன் சேர்க்காது,
உடம்புதனை கேடாக்கும்  கோபம்  .

மனத்தை மலடாக்கி  ,
துக்கத்தை மேலாக்கி ,
துன்பத்தை பெரிதாக்கி ,
வாழ்க்கையை  சோர்வாக்கும்   கவலை  .

மணித்துளி பொருத்து,
மனதினில் நிறுத்தி ,
இருக்கும் நிலை மாற்றி ,
நிதானம் கொண்டால் ,
மாறிவிடும் கோபம்.
மறந்துவிடும் கோபம் .

மனம் விட்டு பேசி ,
அன்பு காட்டும் தோள் சாய்ந்து ,
நேசிக்கும் கரம் பற்றி ,
நடந்தவை நாளை மாறுமென்று
உறுதிகொண்டால்,
பறந்ததோடிடும் கவலை.
பக்கம் வாராது  கவலை .

எழுதுவது எளிது
எடுத்துச் சொல்வது சுலபம்
இருந்து பார்க்க வேண்டும்
முயன்று பார்த்தால் என்ன
 ஒருவராவது பயன் பெற்றால் நலமே 

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

பாடகர் உன்னி கிருஷ்ணன் பிறந்த நாள் வாழ்த்து



பாடகர் உன்னி கிருஷ்ணன் பிறந்த நாள் வாழ்த்து
'மனம் உருகும் அற்புத கானங்கள் பாடிய இனிய பாடகர், முதல் திரைப்பாடல்களின் மூலமே விருதுகள் குவித்த உன்னி கிருஷ்ணனின் பிறந்த நாள் இன்று..

நாள் முழுவதும் இன்றைய நட்சத்திரம் பகுதியில் உன்னி கிருஷ்ணன் பாடிய இனிய பாடல்களைக் கேட்டு ரசியுங்கள்

Happy Birthday @[53664508646:274:Unnikrishnan]'
இனிய முகம்
சிரிப்பைத் தந்திடும் பார்வை
தேன் சுவைக் குரல்
சுகம் தந்திடும் கானங்கள்
அற்புத மெல்லிசைப் பாடல்கள்
இவையனைத்தும் உந்தன் சொந்தம்
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
குரலும், இனிமையும் மாறாதிருக்க வேண்டும்
இன்று மட்டுமல்ல உன் பிறந்த நாள்
என்றைக்கும் பாராட்டு மழை
ஆக உனக்கு தினம் பிறந்த நாள்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.