பணம் என்றபோதும்,
பரிசு என்றபோதும்,
மலரும் மனமே !
சுகம் என்றபோதும்,
சுவை என்றபோதும்,
குதூகலிக்கும் மனமே !
உன்பெருமை பேசுகின்ற போதும்,
நீயே எல்லாம் என்று துதிபாடும் போதும்,
உள்ளம் மகிழும் மனமே !
தவறு என்றபோதும்,
தகராறு என்றபோதும் ,
தவிர்த்திடும் மனமே !
பகை என்றபோதும்,
பிறர் பரிகசிக்கும் போதும்,
நிலை தடுமாறும் மனமே !
உயர்வு பிறருக்கு என்றபோதும்,
உண்மை என்றபோதும்,
உருமாறும் மனமே !
நாளும் மாறும் வாழ்க்கை ,
நம்மிடமில்லை என்று ,
நடுநிலை நின்று நிதர்சனமாய்
இரு மனமே.