சனி, 18 ஜனவரி, 2014

நிதர்சனமாய் இரு மனமே.


பணம் என்றபோதும்,
பரிசு என்றபோதும்,
மலரும் மனமே !

சுகம் என்றபோதும்,
சுவை என்றபோதும்,
குதூகலிக்கும்  மனமே !

உன்பெருமை பேசுகின்ற  போதும்,
நீயே எல்லாம் என்று துதிபாடும் போதும்,
உள்ளம் மகிழும் மனமே !

தவறு என்றபோதும்,
தகராறு  என்றபோதும் ,
தவிர்த்திடும்   மனமே !

பகை என்றபோதும்,
பிறர் பரிகசிக்கும் போதும்,
நிலை தடுமாறும் மனமே !

உயர்வு பிறருக்கு என்றபோதும்,
உண்மை என்றபோதும்,
உருமாறும்  மனமே !

நாளும் மாறும் வாழ்க்கை ,
நம்மிடமில்லை என்று ,
நடுநிலை நின்று நிதர்சனமாய்
இரு மனமே.