வியாழன், 27 அக்டோபர், 2011

பேரா தெண்டாயுதபாணி கோவில் உற்சவரின் சிறப்பு .

உற்சவரைப் பார்த்தவுடன் உயர்வு தந்திடும் கந்தன்    
துதிப்போரின் மனமெல்லாம் நிறைந்திருக்கும் கொஞ்சும் அழகன் 
அர்ச்சிப்போர் மனம் போல் வரும் பொருளைத் தரும் திருக்குமரன். 
துள்ளி வரும் வைர வேலும்,துயர் துடைக்கும் துளசி மாலையும்
உத்திராட்சமும், பதக்கமும் படியளக்கும் புன்னகையும் கொண்டு 
காலமெல்லாம் காத்திடும் வேலன் -பேரா தெண்டாயுதபாணி முருகன் .

கல்வி வியாபாரம்


கற்பிப்பதோ கல்வி
கறப்பதோ பணம்
கல்வி - தர்மம் என்றார்
காசு கொடுத்து தர்மம் செய்வோரிடையே
காசு பெற்று தர்மம் செய்கின்றார் இங்கே
அனுமதியோடு கொள்ளை
யாரிடம் சொல்வது
கடவுளிடம் சொல்லலாம் என்றால்
கடவுளைப் பார்பதற்கும் காசு
இறைவனே ! நீயே பேசு