புதன், 2 ஏப்ரல், 2014

மழை வேண்டும்

மழை வேண்டும்
மழை வேண்டும் தாயே!

ஆறு குளம் கம்மாய் நிறைக்க
மழை வேண்டும்!

கழனி காடு செழிக்க
மழை வேண்டும்!

மண் வாசனை வர
மழை வேண்டாம்.
மனம் நிறைக்க
மழை வேண்டும்!

பெண்ணவள் கரு தரித்தால்,
பிள்ளயொன்று பிறக்குது .
மேகமது கருக்கொண்டு,
மழையது  கொட்டவேண்டும்.

நிலத்தடி நீரும் இல்லாமல்,
நீர்வளமும் இல்லாமல்,
நீர்பிடிப்பு இடமெல்லாம்,
நீக்கி விட்டோம்.

நிலமெல்லாம் துளைபோட்டு,
நீரெல்லாம் உரிஞ்சிவிட்டோம்.
நாளைக்கு நீரென்பது 
வெட்டி எடுக்கும் தங்கம்.
நீர் எடுக்க நிலம் வேண்டும்.

செடிகொடிகள் காயுது ,
பச்சைப் புல்லும் கருகுது ,
தவிக்கும் வாய்க்கும்  தண்ணீரும்,
காசு கொடுத்தாலே கிடைக்குது .,

வரப்பு வெட்டி வாய்க்கால் ,மாற்றி
வளம் கண்ட நாளெல்லாம்
ஏட்டில் மட்டுமே .

கயவர் சிலர் செயல் கண்டு
எங்கள் கண்ணிலும் கண்ணீர்
வற்றிவிட்டது .