புதன், 26 மார்ச், 2014

பெண்ணே, பெண்ணே ,


பெண்ணே, பெண்ணே ,
கடவுள் படைத்த பொன்னே !
பொறுமையின் மறு பெயரே !
மறுப்பேதும் சொல்லாமல்,
மலரும் மருந்தே !

கொடுப்பதும் ,பெறுவதும்,
முறையென்ற  போதும் ,
கொடுப்பது மட்டுமே,
உன் சிறப்பல்லவா !

காப்பதும் ,அளிப்பதும்,
சிறப்பென்ற போதும் ,
மறுப்பின்றி அதனைச்
செய்வது உன்னழகல்லவா !

பெண்ணென்று பிறந்து ,
குடும்ப பெருமை போற்ற ,
ஒளிர்ந்திடும் உயர்வே ,
உவந்தளிக்கும் தருவே .

கண்ணென்றே கணவனையும் ,
கண்ணின் மணியென்று பிள்ளைகளையும் ,
நாளும் போற்றிக் காத்திடும்
நடமாடும் தெய்வமே ! 

அன்னையவள் அன்பிற்கு,
அவனியில் ஈடு இணையுண்டா ?
படும் பாடு சொல்லாமல்,
படுவதே சுகமென்று ,
பார்த்தறிந்த மனமே .

கரு காத்து , உரு தந்து,
உயிர் கொடுத்த உன்னதமே !,
உன்மொழியில்  உன்பெருமை
அள்ளி எடுத்து அருமை
முத்தம், தருவதும்
பெறுவதுமே உன் சிறப்பு.


கருத்துகள் இல்லை: