செவ்வாய், 11 மார்ச், 2014

கண்ணே, கற்கண்டே !

கண்ணே, கற்கண்டே !

கொஞ்சும் விழித்திரை பார்த்தேன்.
நெஞ்சம் மகிழ்ந்திருந்தேன்.
மஞ்சம் நிறைந்திருந்தேன்.

தஞ்சம் என்றே கண்டேன் .
விஞ்சும் தமிழ்  கேட்டேன்.
கெஞ்சும் மொழி  தந்தேன் .

வஞ்சம் இல்லா முகம் தந்தாள் .
அஞ்சும் நடை பயின்றாள் .

அள்ளி அணைத்தேன்  ,
எனதருமை,
இரண்டு வயது மகளை !

(மகள் இல்லாத குறையை
மனத்தால் நிவர்திக்கின்றேன் )

கருத்துகள் இல்லை: