புதன், 11 ஜூன், 2014

குறுக்கு வழி வேண்டாம்


தொந்தரவுகள் நிறைந்த உலகம்,
மந்திரங்களால் மாறுமென்றால்,
மடங்களெல்லாம்,  மறுபிறப்பெடுக்கும்.
காவி வேட்டி கடை சிறக்கும் .

தந்திரங்கள் செய்வோரும்,
சாஸ்திரங்கள் பேசுவோரும்,
தனிக்கட்சி ஆரம்பித்து,
தலைவராகி விடுவர்.

உழைப்பின் உன்னதத்தை
உணராமல், ஊர் சுற்றி
வருவதே தொழில் என்பார்.
உண்மைக்கும், நன்மைக்கும் ,
உதவாது கேடு நினைப்பர் .

உடம்பு வளர்த்து, உயிர் வளர்த்து,
கை உயர்த்தி ,காரியம் செய்து ,
காசு பணம் பரித்து, கயமை புரிவது
எங்கள் கடமை என்பார் .

நன்மை பணிந்து, நயம் பயந்து ,
கண்ணியம் காத்து ,
கொடுப்பதில் சிறந்து ,
மதிப்பு பெறுவதே சிறப்பு.

குறுக்கு வழி நாடாமல்,
குற்றம் புரியாமல் ,
எற்றம் பெற்று ,
உள்ளம் மகிழ்ந்து, உயர்வோம்.







கருத்துகள் இல்லை: