சனி, 5 ஜூலை, 2014

கை பேசி



இதயம் அருகே இடம் பிடிக்கிறாய்  
தொட்டு தொட்டுப் பார்த்தே   மகிழ்கிறார்  
தடவிக் கொடுத்தால்  உயிர் பெறுகிறாய்
உயிரில்லாத போதும் உணர்வாகிறாய்
உணர்வில்லாத போது மௌனமாகிறாய்

காதோரம் உனை அணைத்து
காலம் மறந்து கதை பேசுகிறார்
மணிக் கணக்காய்ப்  பேசி
மனசை இழக்கிறார்
காசும் கரைவது அறியாமல் இருக்கிறார்

பிறப்போடு நீயும் ஒரு உறுப்பாய்
இருக்கும் காலம் அதி தூரமில்லை
கை  பேசியே உன்  வளர்ச்சி
பயமாய் இருக்கிறது.

கருத்துகள் இல்லை: