வியாழன், 13 பிப்ரவரி, 2014

தூய எண்ணங்கள்


மாலையோடு நீயிருக்க
மண  மாலை கனவோடு நானிருக்க
மன்மதக் கனவுகள் மனதிலுருக்க
மனதில் நினைவுகள் நிலைத்திருக்க

கற்பனை தேரில் நாமிருக்க
காலம் மாறாமல் நாம் களித்திருக்க
கட்டுண்ட நேரம் இனித்திருக்க
கடமைகளெல்லாம் ஒளிந்திருக்க

இன்பத்தின் எல்லையை தேடிடுவோம்
இயல்பாய் அதை   சென்றிடுவோம்
இணைந்து இருப்பதே சுகமென்பொம்
இதற்கும் மேலாய்  என்னவென்போம்

அரவணைத்து அள்ளிப் பெறுவது சுகம்
அனைத்தும் நமக்கே என்குது  மனம்
ஆனந்தம் பெற்று மகிழ்வாய் தினம்
ஆரவாரம் தள்ளி விடு புறம்

தூக்க கனவுகளில் இவையே வந்து போக
தூங்காமலிருக்க நான் நினைந்து இருக்க
தூய எண்ணங்கள் ஒன்று சேர
துயரங்கள் என்றும் வாராது.



கருத்துகள் இல்லை: