கேடுடையோர் செல்வம் ,
பரிதவிக்கும் நேரத்தில்,
பயனின்றி போய்விடும் .
நிர்ணயமில்லா வாழ்க்கை ,
நிர்மூலமாய் ஆகிவிடுதல்
நியதி .
ஒப்புக்கு உபசாரமும் ,
உதவாத கையும் , உன்
தேவைக்கு உதவாது.
அன்பெனும் வாக்கும் ,
பண்பெனும் செயலும் ,
குணமெனும் குன்றேற்றி,
கொடுத்துதவும் பொருள் தந்து ,
கோடான கோடி நலம் சேர்க்கும் .
கோபம் குறைத்து ,
குணம் நிறைத்து,
பயம் அகற்றி ,
பண்பு காத்து ,
பணிவோடு இருத்தல் ,
மேன்மக்கள் செயல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக