ஞாயிறு, 6 ஜூலை, 2014

வாழ்க்கை நியதி


கேடுடையோர் செல்வம் ,
பரிதவிக்கும் நேரத்தில்,
பயனின்றி போய்விடும் .

நிர்ணயமில்லா வாழ்க்கை ,
நிர்மூலமாய் ஆகிவிடுதல்
நியதி .

ஒப்புக்கு உபசாரமும் ,
உதவாத கையும் , உன்
தேவைக்கு உதவாது.

அன்பெனும் வாக்கும் ,
பண்பெனும் செயலும் ,
குணமெனும் குன்றேற்றி,
கொடுத்துதவும் பொருள் தந்து ,
கோடான கோடி நலம் சேர்க்கும் .

கோபம் குறைத்து ,
குணம் நிறைத்து,
பயம் அகற்றி ,
பண்பு காத்து ,
பணிவோடு இருத்தல் ,
மேன்மக்கள் செயல்.






கருத்துகள் இல்லை: