சனி, 23 ஆகஸ்ட், 2014

கேள்விகள்


எடுப்பதும் தொடுப்பதும்
வினையென்றால்
நினைப்பதை என்னவென்பது

பார்ப்பதும் நடப்பதும்
செயலென்றால்
மகிழ்வதை என்னவென்பது

படைப்பதும் காப்பதும்
மரபென்றால்
மரணத்தை என்னவென்பது

கொடுப்பதும் பெறுவதும்
தர்மமென்றால்
நேயத்தை என்னவென்பது

தொழுவதும் எழுவதும்
பக்தி யென்றால்
பணிவை என்னவென்பது

பொறுமையும் ,நயமான பேச்சும்,
அன்பென்றால்,
அரவணைப்பை என்னவென்பது ?






கருத்துகள் இல்லை: