சனி, 30 மே, 2015

மனசு ,

வயிறு  நிறைந்தவுடன், போதும்
என்று நினைக்கிற  மனசு ,
பொருள் நிறைந்து இருக்கும்  போதும் ,
போதாதுன்னு  ஏன் மாறுபட்டு நிக்குது ?

கோடி கோடியாய் குவிந்தபோதும் ,
கூடவருவது ஏதுமுண்டோ ?

கூட இருப்போர் நலம் காத்து
குணம் காப்பது நலமா ?
குழி பறிப்பது தகுமா ?

பட்டும், பீதாம்பரமும்,
பகட்டும் பாரினில் இருக்கும் வரையே !

கயமை செய்யாமை ,காயங்கள் தாராது.
பெருமை சேர்ப்பது, பொறுமை காப்பதே!

எனக்கு மட்டும் என்பது ஆணவம்.
கூடி  இருப்பது கோடி சேர்க்கும் ஆவணம்.

உண்மைகள் உயர்வானால் ,
உரிமைகள் நிலையாகும் .










கருத்துகள் இல்லை: