skip to main |
skip to sidebar
காலன் மேல் கோபம்
விதி என்று சொல்லி வேதனை மட்டும் கூடுகிறதே
சிரிப்பின் மொழி மட்டும் தெரிந்த
பால் மணம் மாறா
பச்சிளம் குழந்தையும் பலியாகிறதே
பிறந்து உடன் வளர்ந்து முகம் பார்த்து
சிரித்த நாட்கள்
இன்றோடு முடிந்துவிட்டதே
ஒன்றரை வருடங்கள் உடன் இருந்த நாட்கள்
ஓராயிரம் கதைகள் சொல்லுமே
உள்ளத்தின் பல்லாயிரம் கனவுகள்
நினைக்க மனமின்றி அழிந்துபட்டதே
தாயையும் எடுத்துக்கொண்டாய்
சேயையும் எடுத்துக்கொண்டாய்
காலனே அவர்களிடம் உனக்கு என்ன முன் பாக்கி
கொடுமையின் அவதாரங்கள் ஆயிரமாயிரமாய் உலகில் இருக்க
உனக்கு இவர்கள் மேல் மட்டுமே என்ன அவசரம்
தீங்கு நினைக்காத தாயும்
தீங்கரியாத குழந்தையும்
ஒரு கன நொடியில்
காலனே உன் காலடியில்
ஏன் தந்தாய் இந்த வேதனை
கை பிடித்த கணவன் தனி மரமாய்
நிற்கச் செய்து விட்டாய்
மனம் பதை பதைக்க வைத்துவிட்டாய்
கடலின் நீரெல்லாம் ஒரு நாள் வற்றினாலும்
மலையெல்லாம் மணலாக மாறினாலும்
நீ தந்த ரணம் மட்டும் என்றும் ஆறாதே.
(உறவினர் வீட்டில், தாயும், சேயும் 07.10.2013 அன்று சேலம் - ராசிபுரம் அருகில் ஏற்பட்ட கார் விபத்தில் காலமாகி விட்டார்கள், அதன் வெள்ளிப்பாடு )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக