skip to main |
skip to sidebar
பிள்ளைகள்
பெற்ற தாயின் உயரம் மாறவில்லை
நிறம் மாறவில்லை குணம் மாறவில்லை
பெற்றெடுத்த பிள்ளைகள் பிறந்த நாள் முதலாய் வளர்ந்து வளர்ந்து
வளர்ச்சியில் பெற்ற தாயையும்,தந்தையையும் மிஞ்சி நிற்கின்றார்
வயது கூடக் கூட
பெற்றோர் மீது காட்டும்
அன்பு, பாசம் கருணை நாளும் பொழுதும்
மாறுகிறதே - ஏன் ?
அறிவு கூடுகிறது
அன்பு மட்டும் அவசரமாகிறதே - ஏன் ?
அவசரத்தில் யார் மீதும் பழி போடாதீர்கள்
வாழ்க்கையின் அவசியம்
புது உறவுகளின் வரவு
பழையன மறக்கும் மனசு
இவையே காரணம்
குறை ஒரு பக்கம் மட்டுமே
என நினைப்பதும் தவறு
பொறுமை காத்து
உண்மை நினைத்து
இனி வரும் காலம்
அன்பு காட்டி அரவணைத்துச் செல்லுவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக