புதன், 19 அக்டோபர், 2011


ஒருவர் திறமையை ஒருவர் .ஊக்குவித்து 
ஒருவர் கவலையில் ஒருவர் பங்குகொண்டு
ஒருவர் குறையை ஒருவர் பொறுத்து 
ஒருவர் துன்பத்தில் ஒருவர் ஆறுதல் அளித்து
ஒருவர் முயற்சியில் ஒருவர் ஒத்துழைத்து
ஒருவர் கோபத்தில் ஒருவர் அமைதி காத்து
ஒருவர் சுதந்திரத்தை ஒருவர் அங்கிகரித்து
வாழ்வதே 
இல்லறம் இன்னிக்க சிறக்க சிறந்த வழி
(ஆக்கம்- திரு மீனாக்ஷி சுந்தரம் சோமய்யா,புதுவயல்)           


சப்தபதீ மந்திரத்தின் உட் கருத்தே, தாங்கள் குறிப்பிட்டுள்ள அருமையான கருத்துக்கள். நம் நகரத்தார் திருமணங்களில், தங்கள் அருமையான வாசகங்களை, மணமக்கள் மனமொன்றி சொல்லவேண்டும். நாளும் கடை பிடிக்க வேண்டும்.வாழ்கையில் மகிழ்ச்சி ததும்பும்          

கருத்துகள் இல்லை: