பார்காமலே, முகம் பார்க்காமலே கல்யாணம்
ஆயாவுக்கும் ,ஐயாவுக்கும் !
பார்த்து, பார்த்து குணம் பார்த்து, வகை பார்த்து கல்யாணம்
ஆத்தாவுக்கும் , அப்பச்சிக்கும் !
இவர்களுக்கு,
சிறப்பாயிருந்தது வாழ்க்கை
செழிப்பாயிருந்தது வாழ்க்கை
மகிழ்ச்சி கூடியது
சந்ததிகள் கூடியது
ஜாதகம் பார்க்கவில்லை
நட்சத்திரம் பார்க்கவில்லை
குறையொன்றும் காணவில்லை
காலம் மாறியது,
ஜோசியம் பார்த்தால் சோதனை குறையும் என்றார் ஐயர் !
சோகம் கூடியது , வெளியே யாரும் சொன்னதமில்லை !
மணம் கூட மனப் பொருத்தம் போதும் என்றால்
கேட்பார் யாருமில்லை,
கஷ்டங்கள் கூடியது -
சோசியர் சொல்வதெல்லாம் பலிக்கும் என்றே,
அவர் வீட்டு வாசலிலே தினமும் தவம் கிடக்கிறார்.
சோசியர்கள் பை நிறைக்க,
அவர் வார்த்தைக்கெல்லாம் செவி மடுக்கிறார்.
ராகு, கேது , சனி , செவ்வாய் கட்டம் என்று சொல்லி,
நம் ம(ன)ணம் கெடுக்கிறார்.
பரிகாரம் என்ற பெயரால் பணம் பறிக்கிறார்,
பெற்றோர் ஒன்றும் புரியாமல் மனம் பதைக்கிறார்.
வைசியருக்கும், சத்திரையருக்கும்,
ஜாதகம் பார்க்க வேண்டாம் என்றால்,
சோசியர் என் பிழைப்பு என்னாகும் என்கிறார்,
கட்டம் 12 , ராசி 12 ,நட்சத்திரம் 27 ,
தெரிந்திருந்தால் எல்லாம் அறிந்த சோசியர்.
சொன்னது நடக்கும் எனபார்
அவர் வீட்டில் மாற்றி நடந்ததை யார் அறிவார்?
நல்ல குணம் கொண்டு வாழ்வோம்
நிறை கண்டு மகிழ்வோம்
மனம் பார்த்து மணம் முடிப்போம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக