புதன், 19 அக்டோபர், 2011

ஜாதகம் பார்க்க வேண்டாம்


பார்காமலே, முகம் பார்க்காமலே கல்யாணம்    
ஆயாவுக்கும் ,ஐயாவுக்கும்  ! 

பார்த்து, பார்த்து குணம் பார்த்து, வகை பார்த்து கல்யாணம்  
ஆத்தாவுக்கும் , அப்பச்சிக்கும் !  

இவர்களுக்கு,

சிறப்பாயிருந்தது வாழ்க்கை   
செழிப்பாயிருந்தது வாழ்க்கை 

மகிழ்ச்சி கூடியது 
சந்ததிகள் கூடியது 

ஜாதகம் பார்க்கவில்லை 
நட்சத்திரம் பார்க்கவில்லை 
குறையொன்றும் காணவில்லை 

காலம் மாறியது, 

ஜோசியம் பார்த்தால் சோதனை குறையும் என்றார் ஐயர் !
சோகம் கூடியது , வெளியே யாரும் சொன்னதமில்லை !

மணம் கூட மனப் பொருத்தம் போதும் என்றால்
கேட்பார் யாருமில்லை, 

கஷ்டங்கள் கூடியது -

சோசியர் சொல்வதெல்லாம் பலிக்கும் என்றே, 
அவர் வீட்டு வாசலிலே தினமும் தவம் கிடக்கிறார். 

சோசியர்கள் பை நிறைக்க, 
அவர் வார்த்தைக்கெல்லாம் செவி மடுக்கிறார்.

ராகு, கேது , சனி , செவ்வாய் கட்டம் என்று சொல்லி, 
நம் ம(ன)ணம் கெடுக்கிறார்.

பரிகாரம் என்ற பெயரால் பணம் பறிக்கிறார்,
பெற்றோர் ஒன்றும் புரியாமல் மனம் பதைக்கிறார்.

வைசியருக்கும், சத்திரையருக்கும், 
ஜாதகம் பார்க்க வேண்டாம் என்றால்,
சோசியர் என் பிழைப்பு என்னாகும் என்கிறார்,

கட்டம் 12 , ராசி 12 ,நட்சத்திரம் 27 ,
தெரிந்திருந்தால் எல்லாம் அறிந்த சோசியர்.
சொன்னது நடக்கும் எனபார்
அவர் வீட்டில் மாற்றி நடந்ததை யார் அறிவார்?

நல்ல குணம் கொண்டு வாழ்வோம் 
நிறை கண்டு மகிழ்வோம் 
மனம் பார்த்து மணம் முடிப்போம்  

கருத்துகள் இல்லை: