ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

காசி ஸ்ரீ தட்சிணாமூர்த்தி அவர்களின் அறுபது நிறைவு விழாவிற்கு வாழ்த்து



அடக்கமாய் அன்பாய்
அனுதினமும் சிறப்பாய்
சிரித்த முகத்துடன் 
வலம் வரும் உத்தம 
குலத்துதித்த அருமை நண்பர்.

ஆச்சியோடமர்ந்து அறுபது
காணும் மகிழ்வு
பிள்ளைகள் அறுபது
விழாக்களையும்
காணவேண்டும் பெற்றோர்.

இறைப்பணி, சமுகப்பணி
என்று நாளும் தொண்டாற்றும்
உண்மைச் சிறப்பு.

உயர்வுகள் பல உங்களை
நாடி வர வேண்டும்
நலம் யாவும் பெற்று
சிறக்க வேண்டும்
உள்ளன்போடு வேண்டுகிறேன்
உலகாலும் சொக்கேசன்
பாதம் பணிகின்றேன்.

வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை: