ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

பெருமை மிகுந்த போற்றுதலுக்குரிய மா மனிதர் மேதகு அப்துல் கலாம் மறைவு ..........

பெருமை மிகுந்த போற்றுதலுக்குரிய மா மனிதர் மேதகு
அப்துல் கலாம் மறைவு ..........

இந்திய தீபகற்பத்தின் தென் கிழக்கு பகுதியாம்
இராமேஸ்வரத்தில் பிறந்து
வடகிழக்கு பகுதி மேகாலயாவில் மறைவு கண்ட
இந்தியாவின் ஒப்பற்ற குடிமகனே!
மேகங்களின் ஆலயத்தில் உனக்கோர் ஒய்வு.
எளிமையாய் வாழ்ந்து காட்டி
எட்டாத உயரங்களை எட்டிய பெருமகனே!
இருந்த போது இளைஞர்களை உன் வசப்படுத்தீனாய்
காட்டிய வழியில் வளம் கண்டோம்.
வளம் தந்து தாய்நாட்டின் உயர்வு கண்டாய்,
உந்தன் மறைவு,
மறக்க முடியாத மறைவு,
நிரப்ப முடியாத நிறைவு.

கருத்துகள் இல்லை: